|
‘வாரணம் ஆயிரம்'
![]() இயக்குநர் கௌதம் மேனன் தொடர்ந்து தன் படங்களுக்கு அழகிய தமிழ்ப் பெயர்கள் வைப்பது மகிழ்ச்சி. பெயர்கள் அவரின் சொந்தக் கற்பனை அல்ல என்றாலும் அழகாக இருக்கிறது.
திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைப்பது என்பது மிகப்பெரும் சர்ச்சையாகி,
பின் வரிவிலக்கு அறிவிப்பால் இப்போதெல்லாம் தயாரிப்பாளர்கள் போட்டிபோட்டுக் கொண்டு
தமிழில் பெயர் வைப்பது ஒரு புறம் இருக்கட்டும். இயக்குநர் கௌதம்
மேனன், சூர்யாவுடனான தன் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை
வெளியிட்டதிலிருதே எல்லோரும் “வாரணம்
ஆயிரம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். “வாரணம் என்றால் என்ன? என்பது
தான் பேச்சின் சாராம்சம். இப்படத்தி்ன் தலைப்பு, “வாரணம் என்னவோ…, “வானரம் ஆயிரம்,
“வருணம் ஆயிரம், “வரணும் ஆயிரம் என்று நண்பர்கள் நாவிலெல்லாம் பல பரிணாமங்களைப்
பெற்றுக் கொண்டிருக்க, பலர் ‘வாரணம் என்றால் என்ன என்று தெரியாமல் திகைப்பது
தெரிந்ததே. அதனால், வாரணம் பற்றி ஒரு விளக்கம். ‘வாரணம் என்றால் யானை. ‘வாரணம் ஆயிரம்’ படத்தைப் பற்றி செய்தி வெளியிடும் போதே
சில ஏடுகள், அடைப்பில், “Thousand Elephants” என்று சேர்த்தே வெளியிடுகின்றன. இன்னும், “வாரணம் ஆயிரம்” என்ற சொற்பிரயோகம், ஆண்டாள் அருளிய ‘நாச்சியார்
திருமொழி’யில் வருகிறது. திருமால் தன்னைத் திருமணம் செய்வதுபோல் தான் கண்ட கனவை
ஆண்டாள் தன் தோழியர்க்குச் சொல்கிறபோது, “வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து |